இந்த நாவல் நான் எழுதியிருக்கும் பிறநாவல்களிலிருந்து பலவிதங்களில் தனியானது. அளவில், முறையில், அணுகுதலில், பாத்திர அமைப்பில் எல்லாவற்றிலும்தான். இது 'அலை ஒசையில்' தொடராக வெளிவந்து கொண்டிருக்கும்போது 'எங்கோ நிஜமாக நடந்த கதை போலிருக்கிறதே' என்று சிலர் அடிக்கடி சொன்னார்கள். 'எங்கேனும் நடந்ததோ அல்லது நடக்கிறதோ?'-என்ற எண்ணத்தை உண்டாக்கும் தன்மையே ஒரு கதையின் யதார்த்த நிலைக்குச் சரியான நற்சான்றி தழாகும். ஒரு தினசரியில் வெளிவந்தும், இந்த நாவலை நிறையபேர் படித்திருக்கிறார்கள். எனக்கு வந்த கடிதங்களிலிருந்தும் என்னிடம் விசாரித்தவர்களின் காரசாரமான விமர்சன விவாதங்களிலிருந்தும் இதை நான் தெரிந்து கொண்டேன்.
| Author: Na Parthasarathy |
| Publisher: Blurb |
| Publication Date: Aug 23, 2024 |
| Number of Pages: 150 pages |
| Binding: Paperback or Softback |
| ISBN-10: NA |
| ISBN-13: 9798331270148 |